சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மொழிபெயர்ப்பின்றி தனிச்சிங்கள மொழியில் சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி

வவுனியா ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மொழிபெயர்ப்பின்றி தனிச்சிங்களமொழியில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள்; சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 26.02.2026இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களமொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் சீற்றமடைந்து சபையில் எழுந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய முறையற்ற செயற்பாட்டிற்கு தமது மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.

குறித்த வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டதரப்பினர்களில் பெருமளவானவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டினார். எனவே இவ்வாறு முறையற்ற விதத்தில் மொழிபெயர்ப்பின்றி நீண்ட நேரமாக சிங்களமொழியில் கலந்துரையாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது. அத்தோடு தமிழ் மொழிமூலமான மொழி பெயர்ப்பையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கோரினார்.

அதற்கமைய அதனைத் தொடர்ந்து குறித்த வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தமிழ் மொழிமூலமான மொழிபெயர்ப்புக்களுடன் சீராக கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Comment